மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி
மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி
மக்களை கொள்ளையடித்து காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜ அரசு குணப்படுத்துகிறது: பிரதமர் மோடி

மாநிலங்களுக்கு முக்கியத்துவம்
இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: நவராத்திரி அன்று 9 வகையான சக்திகளை நாம் வணங்குகிறோம். ராஜஸ்தானில் இருந்து எரிசக்தி துறையில் இந்தியாவின் வலிமைக்கு ஒரு புதிய சகாப்தம் எழுதப்படுகிறது. 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய மின்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மக்கள் இயக்கம்
பெரிய நகரங்கள் நீண்ட நேரம் மின்சார தடையை சந்தித்து வந்தன. கிராமங்களில் 4-5 மணி நேரம் மின்சாரம் இருந்தாலே அதனை கொண்டாடினர். 2014 ல் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதை மாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம். ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் வழங்கினோம். 2.5 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. சுத்தமான எரிசக்தியை மக்கள் இயக்கமாக மாற்ற பணியாற்றி வருகிறோம்.
தனி இலாகா
ஜிஎஸ்டி சேமிப்பு திருவிழாவை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. தினசரி பயன்படுத்தும் பொருட்கள் விலை குறைந்துள்ளன. ஆதிவாசி சமூகத்தினரை காங்கிரஸ் எப்போதும் புறக்கணித்தது. அவர்களின் தேவைகளை அக்கட்சி புரிந்து கொண்டது கிடையாது. ஆனால் பாஜ அரசு அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு என தனி இலாகாவை உருவாக்கினோம். வாஜ்பாய் ஆட்சியில் பழங்குடியினருக்கு என முதல்முறையாக தனி இலாகா உருவாக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.