Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 5 பேர் பலி; மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்

உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 5 பேர் பலி; மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்

உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 5 பேர் பலி; மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்

உத்தராகண்டில் வெள்ளம், நிலச்சரிவில் 5 பேர் பலி; மாயமான 20 பேரை தேடும் பணி தீவிரம்

ADDED : செப் 16, 2025 04:02 PM


Google News
Latest Tamil News
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் டேராடூன் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.

உத்தராகண்டில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகள், வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. மேலும் ஒரு பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பேரழிவு நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியது.

வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு படையினர் தீவிரமாக மீட்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் 300 முதல் 400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி போர்க்கால அடிப்படையில் தொடர்கிறது என மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேராடூனில் கடுமையாக பாதிக்கப்பட்ட மால்தேவ்தா மற்றும் கேசர்வாலா பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்தார், மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

'கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது' என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us