Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மத்திய அரசிடம் உதவி

மத்திய அரசிடம் உதவி

மத்திய அரசிடம் உதவி

மத்திய அரசிடம் உதவி

ADDED : மார் 25, 2025 09:00 PM


Google News
யமுனை வெறும் நதி அல்ல; அது நமது கலாசார மற்றும் வரலாற்று பாரம்பரியம். யமுனையை சுத்தம் செய்வோம் என தேர்தலின் போதே வாக்குறுதி அளித்து இருந்தோம்.

கழிவுநீர் மேலாண்மையை வலுப்படுத்த, 20 கோடி ரூபாய் செலவில் 'சூப்பர் சக்கர்' மற்றும் 'டிக்கி' இயந்திரங்கள் வாங்கப்படும். இந்த இயந்திரங்கள் சேறு மற்றும் அடைப்புகளை திறம்பட அகற்ற உதவும். வஜிராபாத் பாதாளச் சாக்கடையை சீரமைக்க கூடுதலாக 10 கோடி ரூபாய் செலவிடப்படும்.

அதேபோல, நஜப்கர் வடிகால் சீரமைப்புக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யமுனை நதியை தூய்மையாக பராமரிக்க குப்பை அகற்றும் கருவிகள், களை அறுவடை இயந்திரங்கள், தூர்வாரும் இயந்திரங்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் வாங்க 40 கோடி ரூபாய் செலவிடப்படும்.

தலைநகர் டில்லியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த மத்திய அரசிடம் 2,000 கோடி ரூபாய் நிதி உதவியை கேட்டுள்ளோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us