Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஹவாலா பணப்பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகை ரன்யா ராவ்

ஹவாலா பணப்பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகை ரன்யா ராவ்

ஹவாலா பணப்பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகை ரன்யா ராவ்

ஹவாலா பணப்பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நடிகை ரன்யா ராவ்

UPDATED : மார் 25, 2025 11:05 PMADDED : மார் 25, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: தங்கக்கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், ஹவாலா பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தி வந்த, கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ் மகளும், நடிகையுமான ரன்யா ராவ், 34, கடந்த 3ம் தேதி இரவு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது, வருவாய் புலனாய்வு பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மது ராவ் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், ' வெளிநாடுகளில் தங்கம் வாங்க ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்ததை ஒப்புக் கொண்டு உள்ளார்,' எனத் தெரிவித்து உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us