பெண்களை தவறாக சித்தரித்தால் நடவடிக்கை; தெலுங்கு திரைப்படங்களுக்கு 'செக்'
பெண்களை தவறாக சித்தரித்தால் நடவடிக்கை; தெலுங்கு திரைப்படங்களுக்கு 'செக்'
பெண்களை தவறாக சித்தரித்தால் நடவடிக்கை; தெலுங்கு திரைப்படங்களுக்கு 'செக்'
ADDED : மார் 21, 2025 09:45 AM

ஹைதராபாத்: திரைப்படங்களில் பெண்களை தவறான முறையில் சித்தரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலுங்கானா மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக தெலுங்கானா திரைப்படங்களில் பெண்களை தவறான முறையில் சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது தெலுங்கானா திரைப்படத்துறையில் முக்கிய பிரச்னையாக தலை தூக்கி உள்ளது.
சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்ட சில தெலுங்கு திரைப்படப் பாடல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சூழலில், திரைப்படத்துறைக்கு தெலுங்கானா மகளிர் ஆணையம் முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளது.
இது குறித்து, தெலுங்கானா மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நெரெல்லா சாரதா கூறியதாவது: திரைப்படத்தில் பெண்களை ஆபாசமான முறையில் சித்தரிக்க வேண்டாம். பெண்களை இழிவுபடுத்தினால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.
பாடல்களில் ஆபாசமாக நடனம் எதும் இடம்பெற்றால், நடனக் கலைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் எதையும் செய்யக்கூடாது. திரைப்படங்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் திரைப்படத்துறை தன்னைத்தானே ஒழுங்குபடுத்திக் கொள்வது துறையின் பொறுப்பாகும். பெண்களை படங்களில் கவுரவமான முறையில் காண்பிப்பது திரைப்படத் துறையின் தார்மீகப் பொறுப்பு, அவர்களை இழிவுபடுத்தக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.