Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

வங்கி ஊழியர்கள் போராட்டம்; 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்

UPDATED : மார் 18, 2025 10:11 AMADDED : மார் 18, 2025 09:15 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை காரணமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வங்கி பணிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை. இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.

போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் வங்கிகள் இயங்காது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் வங்கிகளில் சேவை இருக்காது.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us