Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.60 லட்சம் மதிப்புள்ள 286 கிராம் போதை பொருள் பறிமுதல்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது

ரூ.60 லட்சம் மதிப்புள்ள 286 கிராம் போதை பொருள் பறிமுதல்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது

ரூ.60 லட்சம் மதிப்புள்ள 286 கிராம் போதை பொருள் பறிமுதல்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது

ரூ.60 லட்சம் மதிப்புள்ள 286 கிராம் போதை பொருள் பறிமுதல்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது

ADDED : ஜூன் 29, 2025 04:30 PM


Google News
Latest Tamil News
சத்ரா: ஜார்க்கண்டில் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதை பொருள்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டம் கிதவுர் பகுதியில் ஹெராயின் போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளதாக, ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் அப்பகுதியை கண்காணிப்பு வளையத்துக்கு கொண்டு வந்தனர்.

அதன்படி, நேற்று மாலை கிதவுர் காவல் நிலையப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானம் அருகே சோதனை நடத்தப்பட்டது. இந்த திடீர் சோதனையில், இருவரிடமிருந்து 286 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.

இது குறித்து சத்ரா நகர போலீஸ் எஸ்.பி., சுமித் குமார் அகர்வால் கூறியதாவது:

கைது செய்யப்பட்டவர்கள் அபிமன்யு குமார் சாவ் 20, மற்றும் நிதேஷ் குமார் 19 ,என அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடமிருந்து

பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப் பொருளின் சந்தை விலை சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு யார் இவர்களிடம் தொடர்பு வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு சுமித் குமார் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us