Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

உ.பி.,யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள்: முதல்வர் ஆதித்யநாத் பெருமிதம்

ADDED : மார் 13, 2025 03:59 PM


Google News
Latest Tamil News
கோரக்பூர்: கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

தேசிய துாய்மை காற்று திட்டம் குறித்த தேசிய மாநாடு கூட்டம் கோரக்பூரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:

மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ள நிலையிலும் கடந்த 8 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் வனப்பகுதி கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பாரம்பரிய மரங்கள் நடும் முயற்சி, , உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வனத்துறை ஆய்வு மையம் மற்றும் சத்தீஸ்கர் பல்கலை கண்காணிப்பில் நடந்தது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, காற்றின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக மாநிலம் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த முன்முயற்சி, தேசிய பசுமை இந்தியா திட்டம் போன்ற தேசிய இலக்குகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மாநிலத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இந்நடவடிக்கையால் அதிகரித்த வனப்பகுதி, சுற்றுச்சூழல் சமநிலை, நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஆதித்யநாத் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us