Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாத 16 லட்சம் குழந்தைகள்: அதிர்ச்சி ரிப்போர்ட்

ADDED : ஜூலை 17, 2024 10:29 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் இணைந்து வெளியிட்ட தரவுகள் மூலமாக சில அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில், இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் இருக்கும் நைஜீரியாவில் 21 லட்சம் குழந்தைகள் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாமல் இருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்து எத்தியோப்பியா, காங்கோ, சூடான், இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. முதல் 20 நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 10வது இடத்திலும், சீனா 18வது இடத்திலும் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023ல் இந்தியாவின் நிலை சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. 2021ல் நாட்டில் எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகபட்சமாக 27.3 லட்சமாக இருந்தது.

2021ல் கணக்கிடப்பட்ட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உள்பட 20 நாடுகளில் நோய்த்தடுப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும் அதில் சற்றுதான் முன்னேற்றம் கண்ட நிலையில், இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us