மாளவியா நகர் குடும்பத்தில் 5 பேர் உட்பட 14 பேர் விபத்துக்களில் பலி
மாளவியா நகர் குடும்பத்தில் 5 பேர் உட்பட 14 பேர் விபத்துக்களில் பலி
மாளவியா நகர் குடும்பத்தில் 5 பேர் உட்பட 14 பேர் விபத்துக்களில் பலி

மாம்பழ லாரி
உ.பி., மாநிலம் பிரோசாபாத்தில் இருந்து மாம்பழம் ஏற்றிச் சென்ற மினி லாரி, ஆக்ரா தேசிய நெடுஞ்சாலை-யில், மேம்பாலத்தில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சென்ற போது டிரைவர் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பாலத்தில் இருந்து சாலையில் விழுந்தது.
சுங்கச்சாவடியில் 2 பேர்
லக்னோ - ஆக்ரா விரைவுச் சாலையில் பதேஹாபாத் சுங்கச்சாவடியில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. டில்லியில் இருந்து பீஹார் சென்ற பஸ் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. பஸ்சில் இருந்த இரு பயணியர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த, 15 பயணியர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2 இடத்தில் மூவர்
கிழக்கு உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டம் பச்சோகர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் திவாரி, ராஜேஷ் மற்றும் சந்தன் பாண்டே ஆகியோர் நேற்று முன் தினம் இரவு ஷாகஞ்சிலிருந்து ராபர்ட்ஸ்கஞ்சிற்கு பைக்கில் சென்றனர். பின்னால் வந்த கார், பைக் மீது மோதியது.