தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்

ஒரே மனப்பான்மை
பெரும் நதிகளின் கரையில் மனித நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன. இதேபோல், சங்கத்தின் தாக்கத்தால் எண்ணற்ற உயிர்கள் வளம் பெற்றுஉள்ளன. ஒரு நதி அதன் நீரால் தொடும் நிலத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளப்படுத்வதைப் போல், சங்கம் நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும், சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் வளர்த்து உள்ளது. ஒரு நதி பெரும்பாலும் பல நீரோடைகளாகப் பெருகி அதன் தாக்கத்தை விரிவுபடுத்துகிறது. சங்கத்தின் பயணத்திலும் இதேபோன்ற தாக்கம் ஏற்பட்டுள்ளது.
முதன்மை பணி
ஷாகா என்பது ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் 'நான் என்பதிலிருந்து நாம்' என்ற பயணத்தைத் தொடங்கி, தனிப்பட்ட மாற்றத்தின் செயல்முறையின் மூலம் வழிநடத்தி செல்லும் உத்வேகமான முறையாகும். இந்த சங்கம் நிறுவப்பட்ட தருணத்திலிருந்தே, நாட்டின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை முதன்மைப் பணியாக கருதியுள்ளது. பரம பூஜ்ய டாக்டர் ஹெட்கேவர் மற்றும் பல்வேறு ஸ்வயம்சேவகர்களும் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றனர்.
பெரும் சவால்கள்
பல நுாற்றாண்டுகளாக, சாதி பாகுபாடு, தீண்டாமை போன்ற சமூகக் கேடுகள் ஹிந்து சமூகத்திற்கு பெரும் சவால்களாக இருந்து வருகின்றன. டாக்டர் ஹெட்கேவர் காலத்திலிருந்து இன்று வரை, சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு சர்சங்கசாலக்கும், அத்தகைய பாகுபாட்டிற்கு எதிராகப்போராடியுள்ளனர்.தற்போது, சர்சங்கசாலக், மரியாதைக்குரிய மோகன் பகவத், ஒற்றுமைக்கான தெளிவான அழைப்பை விடுத்து உள்ளார்.


