Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/தண்ணீர் தொட்டி இடிந்து தாய், மகன் பரிதாப பலி

தண்ணீர் தொட்டி இடிந்து தாய், மகன் பரிதாப பலி

தண்ணீர் தொட்டி இடிந்து தாய், மகன் பரிதாப பலி

தண்ணீர் தொட்டி இடிந்து தாய், மகன் பரிதாப பலி

ADDED : ஜூலை 10, 2024 02:21 AM


Google News
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வெள்ளிநேழி பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ். இவரது, மாட்டுப் பண்ணையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வசுதேவ், அவரது மனைவி ஷாமிலி, 30, ஆகியோர், 2 வயது மகன் சாமிராம் உடன் வசித்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு, மதிய உணவு சமைக்க தண்ணீர் எடுப்பதற்காக, தரைமட்டத்தில் இருந்து, 5 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டி அருகே குழந்தையுடன் ஷாமிலி சென்றார்.

அப்போது திடீரென அந்தத் தொட்டி இடிந்து விழுந்தது. தொட்டியின் இடிபாடுகளில், ஷாமிலியும், குழந்தையும் சிக்கிக் கொண்டனர்.

ஒரு மணி நேரம் கழித்து பண்ணையில் இருந்து வந்த வசுதேவ், மனைவி, மகன் இடிபாடுகளில் சிக்கிக் கிடப்பதைக் கண்டு, சத்தமிட்டார்.

அப்பகுதி மக்கள் இடிபாடுகளை நீக்கி, இருவரின் உடல்களை மீட்டு, மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். செர்ப்புளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us