மேடம் மீது பயம்!
நகராட்சிக்கு, தலைவர் இல்லாமல் 15 மாதங்கள் கடந்துள்ளது. இதுவரை வார்டுகளின் வளர்ச்சி பணிகள் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறைபாடுகளை எடுத்துச் சொல்ல கவுன்சில் கூட்டமும் இதுவரை கூட்டவில்லை. எல்லாமே ஆபீசர்களின் இஷ்டப்படி தான் நடக்குது. நகரம் துர்நாற்றம் வீசுவதாக செய்திகள் வருகிறது.
சொல்வதை செய்வாரா?
பெரிய தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு, எட்டு அசெம்பிளி தொகுதிகள் மீதும் அக்கறை இருக்க வேணும். இவருக்கு ஓட்டு கொறைந்த இடம் கோல்டு சிட்டி தான். இருந்தாலும், இந்த பொன்னான நகர் தான் 'சென்ட்ரல்' அரசின் நேரடி உதவியை நம்பி இருக்கிற இடமாகும்.
'அவுட் போஸ்ட்' அவசியம்!
லோக் தேர்தல் நேரத்தில் ஆபீசர்களை இடமாற்றம் செஞ்சாங்க. தேர்தலுக்கு பின், அந்தந்த ஆபீசர்களை மீண்டும் இருந்த இடத்துக்கே அனுப்பிட்டாங்க. இதன்படி வட்டார நிர்வாக பெண் அதிகாரி, மறுபடியும் வந்து விட்டார்.
வெளியேற காரணம்!
கோல்டு மைன்ஸ் ஸ்பெஷல் ஆபீசராக, தமிழகத்தை சேர்ந்தவர், 2016ல் நன் மதிப்போடு தான் பதவியில் இருந்தார். இவர் பெயரை சொல்லி சிலர் 'மாபியா' வேலைகளையும் செஞ்சாங்க. இவரோட பதவிக்காலம் முடிஞ்சு போச்சு; பதவியில் நீடிக்க மேலும் 6 மாதம் 'சான்ஸ்' கேட்டு முயற்சித்தாரு.