ADDED : ஜூலை 26, 2024 12:02 AM

புதுடில்லி: நாடு முழுதும் ஒரே மின் கட்டண முறையை அமல்படுத்த மத்திய அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என்ற கேள்விக்கு, மத்திய மின் துறை இணையமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக் பதிலளித்தார்.
இது குறித்து லோக்சபாவில் அவர் அளித்த விளக்கம்:
மின்சார சட்டம் 2003 விதிப்படி, அந்தந்த மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களே நுகர்வோருக்கு மின்சார கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில், நாடு முழுதும் ஒரே மாதிரியான மின் கட்டணத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகின. ஒரே மாதிரியான மின்சார கட்டணம் தொடர்பான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.