ADDED : ஜூன் 08, 2024 04:54 AM
பெங்களூரு : லோக்சபா தேர்தலுக்கு பின், முதல் முறையாக, காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும்படி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு, அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் இருவரும் பங்கேற்க உள்ளனர். இதற்காக, பெங்களூரு எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து, இன்று காலை 8:00 மணிக்கு தனி விமானம் மூலம், டில்லி புறப்படுகின்றனர்.
அங்கு சில காங்கிரஸ் தலைவர்களுடன் தனியாகவும் ஆலோசனை நடத்த உள்ளனர். கர்நாடக பவனில் தங்குகின்றனர்.