பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு படை வீரர் பலி
பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு படை வீரர் பலி
பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு படை வீரர் பலி
ADDED : ஜூலை 07, 2024 01:25 AM
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின், குல்காம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து.
பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து, தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.