கொலை குற்றவாளியுடன் போலீசார் துப்பாக்கி சண்டை
கொலை குற்றவாளியுடன் போலீசார் துப்பாக்கி சண்டை
கொலை குற்றவாளியுடன் போலீசார் துப்பாக்கி சண்டை
ADDED : ஜூன் 20, 2024 09:55 PM
ரோஹினி:தில்லு தாஜ்புரியா கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இரு கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தில்லு தாஜ்புரியா கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான சுமித் தலைமறைவாக இருந்தார். பரோலில் வெளியே வந்த அவர், மீண்டும் சிறையில் சரணடையவில்லை.
ரோஹினி பகுதியில் அவர் இருப்பதை உறுதி செய்த தனிப்படை போலீசார், அந்த பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி சுமித் துப்பாக்கியால் சுடத் துவங்கினார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
இறுதியில் சுமித்தை போலீசார் கைது செய்தனர்.