அமளியால் பார்லி., ஒத்திவைப்பு: ராகுல் மைக் துண்டிப்பு
அமளியால் பார்லி., ஒத்திவைப்பு: ராகுல் மைக் துண்டிப்பு
அமளியால் பார்லி., ஒத்திவைப்பு: ராகுல் மைக் துண்டிப்பு

முறையிட்டார்
அப்போது, நீட் தேர்வு மோசடி மற்றும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் குறித்து, தாங்கள் அளித்த நோட்டீஸ்கள் என்ன ஆயிற்று என காங்கிரஸ், திரிணமுல், சமாஜ்வாதி, தி.மு.க., உறுப்பினர்கள் கேட்டனர்.
கண்டிக்கத்தக்கது
அமளியால் சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நண்பகல் 12:00 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. பார்லிமென்ட் விவகார துறையின் அமைச்சர் கிரன் ரிஜுஜு, ''எதுவாக இருந்தாலும் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பேசுங்கள். தனியாக பேச முடியாது. சபையின் மாண்பை குறைக்க முயற்சி செய்கிறீர்கள். இது கண்டிக்கத்தக்கது,'' என்றார்.
ராஜ்யசபாவிலும்...
ராஜ்ய சபாவிலும், சபை துவங்கியதுமே, 'விதி எண் 267 ன் கீழ், ஏனைய அலுவல்களை ரத்து செய்துவிட்டு, நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என்று எதிர்க்கட்சியினர் கேட்டனர். தாங்கள் கொடுத்திருந்த நோட்டீஸ்கள் என்ன ஆயிற்று என குரல் எழுப்பினர்.