சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய திட்டம்
சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய திட்டம்
சுங்கச்சாவடி கட்டண வசூலுக்கு புதிய திட்டம்
ADDED : ஜூன் 09, 2024 12:17 AM

புதுடில்லி: ஜி.என்.எஸ்.எஸ்., எனப்படும், 'குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்' வாயிலாக சுங்கச்சாவடி கட்டண வசூல் நடைமுறை திட்டத்தை வகுக்க, உலகளவில் அனுபவம் மற்றும் தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
முதற்கட்டமாக, ஜி.என்.எஸ்.எஸ்., அமைப்பு கட்டண வசூல் முறையை பாஸ்டெக் முறையோடு இணைத்து, ஹைபிரிட் மாடலில் செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் வாயிலாக வாகனங்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல், எந்த ஒரு தடையுமின்றி சுமுகமான நெடுஞ்சாலை பயண அனுபவத்தை பயணியருக்கு வழங்க முடியும் என நம்பப்படுகிறது.