நீட் தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
நீட் தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
நீட் தேர்வு முறைகேடு: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது
ADDED : ஜூலை 11, 2024 05:48 PM

பாட்னா: நீட் தேர்வு முறைகேடு வழக்கில், முக்கிய குற்றவாளி ராக்கேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு, ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், இதுவரை இல்லாத அளவுக்கு, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றனர். வினாத்தாள் கசிந்தது, ஆள் மாறாட்டம் நடந்தது என, பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இன்று (ஜூலை 11) முக்கிய குற்றவாளி ராக்கேஷ் ரஞ்சன் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பீஹார், ஜார்க்கண்ட், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடத்தி, பலரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.