Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி

மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி

மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி

மோடி முதலில் பின்னடைவு பின்னர் அபார வெற்றி

ADDED : ஜூன் 05, 2024 01:13 AM


Google News
வாரணாசி:உத்தர பிரதேசத்தில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, முதலில் பின்னடைவை சந்தித்தாலும் இறுதியில் 1.52 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் களம் கண்டார். கடந்த 1ம் தேதி இங்கு தேர்தல் நடந்த நிலையில், அதில் பதிவான ஓட்டுகள் நேற்று காலை எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் துவக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பின்தங்கி இருந்தார். காங்கிரசின் அஜய் ராய் முன்னிலையில் இருந்தார்.

அடுத்தடுத்த சுற்றுகளில் பிரதமர் மோடி, அஜய் ராயை விட கூடுதல் ஓட்டுகள் பெற்று முன்னிலைப் பெற்றார். முடிவில், மோடி 6.13 லட்சம் ஓட்டுகள் பெற்றார். அஜய் ராய்க்கு 4.60 லட்சம் ஓட்டுகள் கிடைத்தன. இருவருக்கும் இடையிலான ஓட்டு வித்தியாசம் 1.52 லட்சம். இதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்த லோக்சபா தேர்தலில் 4.79 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.

இரண்டிலும் ராகுல் வெற்றி


காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளாவின் வயநாட்டில், அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார். அதேபோல், ரேபரேலியில், பா.ஜ.,வின் தினேஷ் பிரதாப் சிங், ராகுலை எதிர்கொண்டார். இந்த இரு தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெற்றுள்ளார். வயநாட்டில், 6.47 லட்சம் லட்சம் ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்த ஆனி, 2.83 லட்சம் ஓட்டுகள் பெற்றார். இதனால், 3.64 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் வென்றார். ரேபரேலியிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us