மகனை அரசியல் வாரிசாக்கும் குமாரசாமி
மகனை அரசியல் வாரிசாக்கும் குமாரசாமி
மகனை அரசியல் வாரிசாக்கும் குமாரசாமி

பல மாதங்கள்
சட்டசபை தேர்தலில் பலத்த அடி வாங்கிய பா.ஜ., தோல்வியில் இருந்து மீள, பல மாதங்களாகின. ஆனால், வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், ம.ஜ.த., மனம் தளராமல் லோக்சபா தேர்தலுக்கு தயாரானது. சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலிலும், அதிகமான ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என, காங்கிரஸ் நம்பியது. இந்த நம்பிக்கை பொய்த்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்தன.
பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல், ஹாசன் லோக்சபா எம்.பி.,யான பின், இவரே வருங்காலத்தில் தேவகவுடாவின் அரசியல் வாரிசாவார் என, தலைவர்கள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இவ்விஷயத்தில் ரேவண்ணாவும், அவரது மனைவி பவானியும் அதிக ஆர்வம் காண்பித்தனர்.
தேசிய அரசியல்
ரேவண்ணா குடும்பத்தினர், பழையபடி கட்சி பணிகளில் ஈடுபட தற்போதைக்கு சாத்தியம் இல்லை. குமாரசாமியும் எம்.பி.,யாக தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார்.