Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ செங்குத்தாக கவிழ்ந்த கேரளா பஸ்

செங்குத்தாக கவிழ்ந்த கேரளா பஸ்

செங்குத்தாக கவிழ்ந்த கேரளா பஸ்

செங்குத்தாக கவிழ்ந்த கேரளா பஸ்

ADDED : மார் 14, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
மூணாறு :கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில், அடிமாலி அருகே கேரள அரசு பஸ் தேவியாறு ஆற்றில் கவிழ்ந்தது.

தமிழகம் உடுமலைபேட்டையில் இருந்து மூணாறு வழியாக எர்ணாகுளத்திற்கு கேரள அரசு பஸ் நேற்று முன்தினம் மாலை சென்றது. பஸ்சில் 16 பயணியர் இருந்தனர்.

கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அடிமாலி அருகே இரும்பு பாலம் செராயிபடி பகுதியில் மாலை 6:45 மணிக்கு பஸ் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தேவியாறு ஆற்றில் செங்குத்தாக கவிழ்ந்தது.

அதில் டிரைவர் உட்பட ஒரு சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்ட நிலையில் அனைவரும் உயிர் தப்பினர்.

அப்பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கும் நிலையில், மழை பெய்ததால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதாக தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us