Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அசாமில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: 6.5 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: 6.5 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: 6.5 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: 6.5 லட்சம் மக்கள் பாதிப்பு

ADDED : ஜூலை 02, 2024 01:14 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, 6.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கனமழையால் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாநிலமான அசாமில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாத மழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

6.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படை இதுவரை வெள்ளத்தில் சிக்கிய, 13 பேரை மீட்டுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகள் உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திப்ருகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கி தவித்த மக்களை மீட்பு படையினர் மீட்டனர். இந்த ஆண்டு வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us