Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இதுவரை 110 பேர் பலி

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இதுவரை 110 பேர் பலி

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இதுவரை 110 பேர் பலி

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் வெயில்: இதுவரை 110 பேர் பலி

ADDED : ஜூன் 20, 2024 04:45 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கோடை காலம் இன்னும் முடிவடையாமல், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலையின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 110 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பீஹார், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் அதிக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us