Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஹரியானா சட்டசபை தேர்தல்: தனித்து களம் காணும் ஆம்ஆத்மி அள்ளி விட்ட 5 வாக்குறுதிகள்

ஹரியானா சட்டசபை தேர்தல்: தனித்து களம் காணும் ஆம்ஆத்மி அள்ளி விட்ட 5 வாக்குறுதிகள்

ஹரியானா சட்டசபை தேர்தல்: தனித்து களம் காணும் ஆம்ஆத்மி அள்ளி விட்ட 5 வாக்குறுதிகள்

ஹரியானா சட்டசபை தேர்தல்: தனித்து களம் காணும் ஆம்ஆத்மி அள்ளி விட்ட 5 வாக்குறுதிகள்

ADDED : ஜூலை 20, 2024 04:57 PM


Google News
Latest Tamil News
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை ஆம்ஆத்மி வெளியிட்டுள்ளது. இலவச மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.,வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தற்போதே வேலைகளில் இறங்கிவிட்டன.

லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் இண்டியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி, ஹரியானா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை.

இந்நிலையில், இன்று (ஜூலை 20) ஹரியானா மாநிலத்தின் பஞ்சகுலா பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது அவர் 5 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

1. மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் இலவசம் மின்சாரம் வழங்கப்படும்.

2. அனைவருக்கும் இலவசமாக நல்ல மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

3. அரசுப் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்கப்படும்.

4. ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதம் 1000 வழங்கப்படும்.

5. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us