Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ குளியல் அறை கீசரில் காஸ் கசிந்து தாய், மகன் பலி

குளியல் அறை கீசரில் காஸ் கசிந்து தாய், மகன் பலி

குளியல் அறை கீசரில் காஸ் கசிந்து தாய், மகன் பலி

குளியல் அறை கீசரில் காஸ் கசிந்து தாய், மகன் பலி

ADDED : ஜூலை 23, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
மைசூரு: மைசூரு மாவட்டம், ஜோதி நகரைச் சேர்ந்தவர் ஷோபா, 40. இவரது மகன் திலிப், 17. மாகடியில் உள்ள பி.ஜி.எஸ்., கல்லுாரியில் பி.யு.சி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு குளிப்பதற்காக தண்ணீரை சூடாக்கும் காஸ் கீசரை 'ஆன்' செய்துவிட்டு குளிக்கச் சென்றார். குளியல் அறையில் ஜன்னல் இல்லை.

நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. கதவை தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று ஷோபா பார்த்தபோது, திலிப் மயக்கமடைந்து கீழே விழுந்திருந்தார்.

அதிர்ச்சியடைந்த ஷோபா, மகனை எழுப்ப முயற்சித்தார். அப்போது அவரும் மூச்சுத் திணறி மயக்கம் அடைந்தார்.

பணிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்த மூத்த மகள், தாயும், சகோதரனும் மயக்கம் அடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரை அழைத்து, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர், இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

மாகடி போலீசார் விசாரிக்கின்றனர்.

படம்: ஷோபா, திலிப்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us