Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

பருவமழையால் தீ விபத்துகள் குறைவு

ADDED : ஜூலை 05, 2024 01:35 AM


Google News
புதுடில்லி,:பருவ மழை துவங்கிய பின் தேசிய தலைநகரில் தீ விபத்துகள் 50 சதவீதத்துக்கும் மேலே குறைந்துவிட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர். கோடை காலம் துவங்கியதில் இருந்து தீ விபத்து மற்றும் விலங்குகள் மீட்பு தொடர்பாக தினமும் 200க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்து கொண்டிருந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அதுவே பருவ மழை துவங்கி விட்டபின், தற்போது தினமும் சராசரியாக 70 முதல் 80 அழைப்புகள் வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த அழைப்புகளில் 20 முதல் 30 அழைப்புகள் விலங்குகள், பறவைகளை மீட்பது பற்றியதாகும். இந்த ஆண்டில் மட்டும் தீ விபத்துகளில் இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர். 390க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us