Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

டில்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

UPDATED : மார் 13, 2025 11:38 AMADDED : மார் 13, 2025 11:31 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் பிரிட்டன் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, டில்லியைச் சேர்ந்த ஒரு நபருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த நபரை சந்திப்பதற்காக, தலைநகர் டில்லிக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.

தென்கிழக்கு டில்லியில் உள்ள சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தின் அருகே உள்ள மஹிபல்பூரில் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். அந்த அறையில் அந்த நபருடன் தங்கியிருக்கும் போது, பிரிட்டன் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால், பாதிக்கப்பட்ட பெண் உதவி கேட்டு செல்லும் போது, ஓட்டலின் லிப்டில் வைத்து மற்றொரு நபரால் பாலியல் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us