ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு ஜாமின்
ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு ஜாமின்
ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயாருக்கு ஜாமின்
UPDATED : ஜூன் 18, 2024 01:19 PM
ADDED : ஜூன் 18, 2024 12:03 PM

பெங்களூரு: ஆபாச வீடியோ வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானிக்கு கர்நாடக நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (வயது 33). இவர், சில பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்து இருந்ததாகவும் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. பிரஜ்வல் ரேவண்ணா சிறப்பு புலனாய்வு குழுவின் காவலில் இருந்தார். அவரது தாயார் பவானியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று (ஜூன் 18) பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பவானிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
நிபந்தனைகள்
'2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்க முயற்சி செய்யக் கூடாது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்' என பவானி ரேவண்ணாவுக்கு நீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.