Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பீஹாரில் 10 நாட்களில் 6வது சம்பவம்

மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பீஹாரில் 10 நாட்களில் 6வது சம்பவம்

மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பீஹாரில் 10 நாட்களில் 6வது சம்பவம்

மற்றொரு பாலம் இடிந்து விழுந்தது பீஹாரில் 10 நாட்களில் 6வது சம்பவம்

ADDED : ஜூலை 01, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
பாட்னா,: பீஹாரில் நேற்று, மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இங்கு கடந்த 10 நாட்களில் மட்டும் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு கிசான்கஞ்ச் மாவட்டத்தின் தாக்கூர் கஞ்ச் பகுதியில் பண்ட் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கடந்த 2007ல் கட்டப்பட்டது. சமீபகாலமாக அங்கு கனமழை பெய்வதால், ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், பாலத்தின் கட்டுமான சுவரில் விரிசல் ஏற்பட்டு, பாலம் இடிந்து விழுந்தது.

கடந்த 10 நாட்களில் பீஹார் மாநிலத்தில் மட்டும் ஆறு பாலங்கள் இடிந்து விழுந்துஉள்ளன.

தொடர் கனமழையால் மதுபானி பகுதியில் கட்டப்பட்டு வந்த 75 மீட்டர் நீளம் உடைய பாலம் இடிந்து விழுந்தது.

அதற்கு முன் கிழக்கு சம்கரன், அராரியா, சிவான், கிஷன்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்தன.

இதன் காரணமாக, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஆளும் அரசை, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருவதால், கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us