சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்
ADDED : ஜூன் 27, 2024 06:48 AM

பெங்களூரு : எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது பதிவான, இரண்டாவது பாலியல் வழக்கும், சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ம.ஜ.த., -- எம்.எல். சி., சூரஜ் ரேவண்ணா, 36. இவர் மீது கடந்த 22ம் தேதி, அரிசிகெரேயை சேர்ந்த 36 வயது வாலிபர் பாலியல் புகார் அளித்தார். இதன்படி, அவர் மீது ஹொளேநரசிபுரா போலீசில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சூரஜ் மீது அவரது ஆதரவாளரான சிவகுமார் என்பவர், தனக்கும் சூரஜ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று, ஹொளேநரசிபுரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி சூரஜ் மீது இரண்டாவது பாலியல் வழக்கு பதிவானது. இந்த வழக்கையும் சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றியுள்ளது.