‛நீட்' வினாத்தாள் கசிவு: 13 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை
‛நீட்' வினாத்தாள் கசிவு: 13 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை
‛நீட்' வினாத்தாள் கசிவு: 13 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை
ADDED : ஆக 01, 2024 08:20 PM

புதுடில்லி: ‛நீட் ' வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் இன்று ( ஆக.,1) 13 பேர் மீது சி.பி.ஐ., குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான ‛‛நீட் '' தேர்வு கடந்த மே.05-ம் தேதி நடந்ததில் பீஹார், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வினாத்தாள் வெளியான விவகாரம் நாடு முழுதும் பேசப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை ஏற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். .இதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இன்று ( ஆக.,1)முக்கிய குற்றவாளிகள் 13 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.,