பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம்!
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம்!
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் தீர்மானம்!

முழக்கம்
'என்னை நீங்கள் எவ்வளவு அவதுாறு செய்தாலும் பரவாயில்லை. நான் தொடர்ந்து போராடுவேன். உங்களிடம் நான் மன்னிப்பு கோரப் போவதில்லை' என, ராகுல் பதிலளித்தார்.
முற்றுகை
தங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை என தெரிந்ததும், சபையின் மையப்பகுதிக்குள் இறங்கி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு, காங்., - எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர்.
பதிவேற்றம்
ராகுல் குறித்து அனுராக் தாக்குர் மறைமுகமாக பேசிய கருத்து, சபைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதி மட்டும் எடிட் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ராகுல் மட்டும் கேட்கலாமா?
ராகுலை தவிர, அனுராக் தாக்குரின் பேச்சை யாரும் எதிர்க்கவில்லை. அவர் உத்தரவுப்படி தான், காங்., - எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், ராணுவ வீரர்கள் என எல்லாரது ஜாதி குறித்தும் ராகுல் கேட்கிறார். ஆனால், அவருடைய ஜாதி குறித்து கேட்டால் உடனே கோபமடைகிறார். அது ஏன் என்பது புரியவில்லை.