
சந்தையை சதுராடிய போர் நிலவரம்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, கடந்த 12 நாட்களாக நீடித்த பதற்றம் முடிவுக்கு வந்தது. இதனால், நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி,ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய்எஸ்.எஸ்.இ., என அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 5,266 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 3.20 சதவீதம் சரிந்து, 69.13 அமெரிக்க டாலராக இருந்தது
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 பைசா அதிகரித்து, 86.05 ரூபாயாக இருந்தது