Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

ADDED : மே 27, 2025 10:27 PM


Google News
Latest Tamil News

முதலீட்டாளர்களின் முன்னெச்சரிக்கை


நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் இறக்கம் கண்டன. நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சந்தை குறியீடுகள் கண்ட உயர்வுக்கு தடை ஏற்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை மற்றும் தயாரிப்புத்துறை தொடர்பான தரவுகள் இன்று முதல் வெளிவரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள், வங்கி, ஐ.டி., மற்றும் வாகனத்துறை பங்குகளை அதிகளவில் விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் 1,054.75 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு, பின், 624.82 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது. நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதம் சரிவுடன் நிறைவு செய்தன.

சரிவுக்கு காரணங்கள்


1 தொழில்துறை தரவுகள் தொடர்பான முன்னெச்சரிக்கை

2 பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தது

உலக சந்தைகள்


திங்களன்று அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்சேங் உயர்வுடனும்; தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடனும் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.

சரிவு கண்ட பங்குகள் -- நிப்டி

அல்ட்ராடெக் சிமென்ட் 2.28%

ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் 2.02%

ஐ.டி.சி., 1.85%

உயர்வு கண்ட பங்குகள்


ஜியோ பைனான்ஸ் 3.87%

இண்டஸ்இண்ட் வங்கி 2.61%

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 348 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.51 சதவீதம் அதிகரித்து, 65.07 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 பைசா சரிந்து, 85.40 ரூபாயாக

இருந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us