
பணவீக்கம் குறைந்ததால் உயர்வு
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஏப்ரலில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததால், வரும் ஜூனில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
உலக சந்தைகள்
அமெரிக்காவிலும் பணவீக்கம் குறைந்ததால், செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. இதன் தொடர்ச்சியாக, ஆசிய சந்தைகளான தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஜப்பானின் நிக்கி மட்டும் சரிவு கண்டது. இதே போன்று, ஐரோப்பிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
சில்லரை விலை பணவீக்கம் குறைந்ததால், ரெப்போ வட்டி குறைய வாய்ப்பு
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 932 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.13 சதவீதம் குறைந்து, 65.88 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்து, 85.32 ரூபாயாக இருந்தது.