/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
கென்ட் ஆர்.ஓ., நிறுவனத்துக்கு ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி

கென்ட் ஆர்.ஓ.,
இந்நிறுவனத்தின் பங்கு விற்பனை முற்றிலும் அதன் பங்குதாரர்களின் ஒரு கோடி பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக திரட்டப்பட உள்ளது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் எந்த நிதியையும் பெறாது.
கரம்தரா இன்ஜினியரிங்
இந்நிறுவனம், 1,350 கோடி ரூபாய் புதிய பங்கு வெளியீட்டிலும், 400 கோடி ரூபாய் அதன் பங்குதாரர்களின் பங்குகள் வெளியீட்டின் வாயிலாகவும் நிதி திரட்டுகிறது.
மங்கள் எலக்ட்ரிக்கல்ஸ்
இந்நிறுவனம், 450 கோடி ரூபாய் மதிப்பிலான முழுமையான புதிய பங்கு வெளியீடாகும். திரட்டப்படும் நிதி, செயல்பாட்டு மூலதனத்துக்கு 122 கோடி ரூபாய், ராஜஸ்தான் ஆலை விரிவாக்கத்திற்கு 120 கோடி ரூபாய், கடனை திருப்பி செலுத்த 96 கோடி ரூபாய் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
வித்யா ஒயர்ஸ்
இந்நிறுவனம், 320 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் மற்றும் பங்குதாரர்களின் 1 கோடி பங்குகள் வாயிலாக கிடைக்கும் வருவாயை, மூலதன செலவுகள், கடன்களை திருப்பிச் செலுத்துதல் மற்றும் பொது நிறுவன பயன்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.