/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது
திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது
திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது
திசை அறியா நிலை வந்து போகவும் வாய்ப்புள்ளது

கடந்த வாரம்
தொடர்ந்து ஐந்து வர்த்தக நாட்களாக இறக்கத்தை சந்தித்து வந்த சந்தை, கடந்த வெள்ளியன்று ஏற்றம் கண்டது. பட்ஜெட்டை தொடர்ந்து பங்குகளை அதிகளவில் விற்று வந்த அன்னிய முதலீட்டாளர்களும், நேற்று முன்தினம் குறிப்பிடத்தக்க அளவு பங்குகளை வாங்கி இருந்தனர்
வரும் வாரம்
உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க அளவு, எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 21 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 30 புள்ளிகள் இறக்கத்துடனும், புதனன்று 65 புள்ளிகள் இறக்கத்துடனும், வியாழனன்று 7 புள்ளிகள் இறக்கத்துடனும், வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 428 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 303 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது