Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறு, குறு நிறுவன நிலுவை தொகை தாமதமின்றி கிடைக்க இணையதளம்

சிறு, குறு நிறுவன நிலுவை தொகை தாமதமின்றி கிடைக்க இணையதளம்

சிறு, குறு நிறுவன நிலுவை தொகை தாமதமின்றி கிடைக்க இணையதளம்

சிறு, குறு நிறுவன நிலுவை தொகை தாமதமின்றி கிடைக்க இணையதளம்

ADDED : அக் 12, 2025 03:22 AM


Google News
Latest Tamil News
சென்னை:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கிய பெரிய நிறுவனங்கள் பணம் தாராமல் தாமதம் செய்தால், அதை விரைவாக பெற்று தர மத்திய அரசின், 'ஆன்லைன் டிஸ்பியூட் போர்ட்டல்' உதவுகிறது.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எழுது பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

அவற்றிடம் இருந்து பொருட்களை வாங்கும் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், குறித்த காலத்திற்குள் பணம் தருவதில்லை.

இதனால், மூலப்பொருட்களை வாங்கவும், வங்கி கடனை அடைக்கவும் முடியாமல் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்படும் நிறுவனங்களுக்கு, மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின், 'odr.msme.gov.in' தளத்தின் வாயிலாக விரைவாக பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விரைந்து நடவடிக்கை


இதுகுறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் பெரிய நிறுவனங்களிடம் இருந்து, 45 நாட்களுக்கு மேல் பணம் வராமல் பாதிக்கப்படும் நிறுவனங்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடியில் உள்ள வசதியாக்கல் கவுன்சிலில் புகார் அளிக்கலாம்.

இதன் தலைவரான தொழில் வணிக ஆணையர் விசாரணை நடத்தி, தாமதமான பணத்தை வட்டியுடன் வசூலித்து தர நடவடிக்கை எடுப்பார்.

பணம் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிறுவனங்கள், கவுன்சிலில் புகார் அளிக்க, 45 நாட்களுக்கு மேல் காத்திருக்காமல், மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் ஓ.டி.ஆர்., போர்ட்டலில் ஆவணங்களை சமர்ப்பித்தால், விரைவாக பணம் பெற்று தரப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எஸ்.எம்.இ.,களுக்கு சேர வேண்டிய தொகை தாமதம் ஆனால், 'odr.msme.gov.in' தளத்தின் வாயிலாக விரைவாக பணம் கிடைக்க நடவடிக்கை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us