எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு வலியுறுத்தல் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை
எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு வலியுறுத்தல் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை
எத்தனால் கொள்முதல் விலையை அதிகரிக்க அரசுக்கு வலியுறுத்தல் சர்க்கரை ஆலைகள் சங்கம் கோரிக்கை
ADDED : மே 22, 2025 11:43 PM

புதுடில்லி:அதிகரித்து வரும் கரும்பு கொள்முதல் விலைக்கு ஏற்ப, எத்தனால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என, இந்தியா சர்க்கரை ஆலைகள் சங்கமான 'இஸ்மா' அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்கம் தெரிவித்திருப்பதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளில் கரும்புக்கான விலை, 11.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எத்தனாலுக்கான விலை உயர்த்தப்படவில்லை.
கடந்த காலங்களில் கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்படும் போது, எத்தனாலுக்கான விலையையும் அரசு திருத்தி வந்தது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அவ்வாறு நடக்கவில்லை. எத்தனால் உற்பத்தி திறனுக்காக 40,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது எத்தனால் உற்பத்தி 850 கோடி லிட்டராக உள்ளது. ஆனால், கொள்முதல் விலை அதிகரிக்காததால், உற்பத்தி ஆலைகள் நிதி நெருக்கடிக்கு ஆளாகிவருகின்றன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.