தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!
தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!
தரக்கட்டுப்பாடு வாபஸ்: ஆதரவும், அபாயமும்!

விமர்சனம்
குறைந்த தரத்திலான இறக்குமதியை தடுக்கவும், உள்நாட்டு தயாரிப்புகளின் தரநிலையை உயர்த்தவும் தரக் கட்டுப்பாடு உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. 2014ல் 106 பொருட்களுக்கு, 14 தரக் கட்டுப்பாடு உத்தரவு இருந்தது. அது, 769 பொருட்களுக்கு 187 உத்தரவுகள் என அதிகரித்தது. இது, இறக்குமதி மற்றும் இயக்கச் செலவு அதிகரிப்பு, விதிகளை நிறைவு செய்வதில் தாமதம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது.
தரக் கட்டுப்பாடு
உத்தரவுக்கு உட்பட்ட பல மூலப்பொருட்கள் உள்நாட்டில் தேவையான அளவு தயாரிக்கப்படுவதில்லை. ஆனால், கட்டுப்பாடு காரணமாக இறக்குமதி பற்றாக்குறை, தாமதம், கண்டபடி விலை நிர்ணயம் ஆகியவற்றுக்கு உள்ளாகின்றன. ஏற்றுமதி தொடர்புடைய ஜவுளி, காலணி, எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை இதனால் பாதிக்கப்பட்டு, சர்வதேச போட்டித் திறனை இழப்பது தெரிய வந்தது.
உத்தரவு
அது ஏற்கப்பட்டுள்ளதால், தரமற்ற மூலப்பொருட்கள் அதிகளவில் இறக்குமதியாகுமா; அவற்றில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் கேள்விக்குறியாகுமா என்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், நுகர்வோர் கைகளுக்கு தயாரிப்பு பொருட்கள் செல்லும் கடைசி நிலையில், பாதுகாப்பு பரிசோதனைகளை உறுதி செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

எவ்வளவு பயன்?
நாட்டின் தரக் கட்டுப்பாடு உத்தரவுகள் இதுவரை கலவையான விளைவுகளைத் தான் உருவாக்கியுள்ளன. மின்சார சாதனங்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் போன்ற பரிசோதனை வசதி போதுமான துறைகளில், பொருட்களின் தரத்தை உயர்த்தவும், தரமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்தவும் உதவின.


