Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழக அரசு, ஜப்பானின் எஹிம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ADDED : ஜன 23, 2024 12:00 AM


Google News
சென்னை: ஜப்பான் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன.

அந்த வரிசையில், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், தமிழக அரசு மற்றும் ஜப்பானின் எஹிம் மாகாணம் இடையே, சென்னையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில், தமிழக வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, எஹிம் மாகாணத்தின் கவர்னர் டோகிஹிரோ நகமுரா கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில், எஹிம் மாகாணத்தை சேர்ந்த, 70 தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த ஒப்பந்தம் வாயிலாக, வேளாண், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில், எஹிம் மாகாணத்தை சேர்ந்த நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க உள்ளன.

மேலும், அந்த தொழில் நிறுவனங்கள், தமிழக தொழில் துறையுடன் இணைந்து, தமிழகத்தில் உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கும்.

இதுதவிர, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு துறைகளில் இரு தரப்பும் இணைந்து செயல்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us