பி.சி.ஜிண்டால் குழுமத்தில் அமலாக்கத்து றை ரெய்டு
பி.சி.ஜிண்டால் குழுமத்தில் அமலாக்கத்து றை ரெய்டு
பி.சி.ஜிண்டால் குழுமத்தில் அமலாக்கத்து றை ரெய்டு
ADDED : செப் 19, 2025 01:04 AM

புதுடில்லி:அன்னிய செலாவணி மோசடி தொடர்பான புகாரில், பி.சி.ஜிண்டால் குழுமம் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மின் உற்பத்தி துறையில் முக்கிய நிறுவனமாக திகழும் ஜிண்டால் குழுமத்துக்கு சொந்தமான ஜிண்டால் இந்தியா தெர்மல் பவர் மற்றும் ஜிண்டால் இந்தியா பவர்டெக் ஆகிய நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகளில், அன்னிய முதலீட்டு விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளின் படி, டில்லி என்.சி.ஆர்., ஹைதராபாதில் 13 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.