ADDED : மே 16, 2026 07:16 AM

அ நிறம் | அளவு
இந்தியாவில் மீண்டும் 'டென்சென்ட்'
'டி ஜிட்டல் கேமிங்' துறைக்கான ஒழுங்குமுறை விதிகள் தெளிவாகி வருவது, சீனா உடனான வர்த்தக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது ஆகிய காரணங்களால் 'டென்சென்ட்' நிறுவனம், இந்தியாவில் தனது செயல்பாட்டை மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக, 10 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஹோட்டல் துறையில் அதானி
ஐ. ஹெ ச்.ஜி., ஹோட்டல்ஸ் குழுமத்துடன் இணைந்து, ஹோட்டல் துறையில் களம் இறங்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்து உள்ளது. இதற்காக மும்பை, ஆமதாபாத் உள்ளிட்ட நான்கு நகரங்களில் ஐந்து புதிய ஹோட்டல்களை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் வரவு, ஹோட்டல் துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
