கைகொடுத்த ட்ரோன்கள்: தேவையை அதிகரித்த போர் சூழல்
கைகொடுத்த ட்ரோன்கள்: தேவையை அதிகரித்த போர் சூழல்
கைகொடுத்த ட்ரோன்கள்: தேவையை அதிகரித்த போர் சூழல்

![]() |
அன்னிய தயாரிப்புகள்
எனினும், பாகிஸ்தானில் இருந்து அதிகளவில் ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் எல்லைக்குள் ட்ரோன்கள் ஏவப்பட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதால், நம் நாட்டிலும் ராணுவத்துக்கு ட்ரோன் தயாரிப்பை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏவுகணைக்கு மாற்று
தற்போதைய புவி அரசியல் சூழலில், ட்ரோன்களின் திறனை ஏவுகணைக்கு பதிலாக பயன்படுத்த இயலும் என்பதுடன், ஏவுகணைகளை விட ட்ரோன் தயாரிப்பு செலவு மிகக் குறைவு என்பதால், ராணுவப் பயன்பாட்டுக்கு ட்ரோன் தயாரிப்பு முன்னிலைக்கு வந்திருக்கிறது.
இலக்குகள்
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாட்டில் 550 ட்ரோன் நிறுவனங்கள் துவங்கப்பட உள்ளன
முன்னணி நிறுவனங்கள்
ட்ரோன்களில் தாக்குதல், தற்கொலை, கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் ட்ரோன்கள் என பல வகைகள் உள்ளன. கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏரோ இந்தியா - 2025 வான் சாகச கண்காட்சியில் எட்டு ட்ரோன்களை அறிமுகம் செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஸ்கை ஸ்ட்ரைக்கர் தற்கொலை ட்ரோன்கள், பெங்களூரின் 'ஆல்பா' மற்றும் இஸ்ரேல் நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் உருவாக்கியவை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ட்ரோன்கள், ராணுவத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளன.