ADDED : ஜூன் 28, 2025 01:12 AM

இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி, கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 1.15 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது. இது, ஜி.டி.பி.,யில் 1.30 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்து
உள்ளது.
முந்தைய ஆண்டின் மார்ச் காலாண்டில், நடப்பு கணக்கு உபரி 39,000 கோடி ரூபாயாக, ஜி.டி.பி.,யில் 0.50 சதவீதமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, நடப்பு கணக்கு பற்றாக்குறை, 2023-- - 24ம் ஆண்டில் 2.21 லட்சம் கோடி ரூபாயாக பதிவான நிலையில், 2024 - -25ம் நிதியாண்டில் 1.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.