Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ குடும்ப வணிகத்தை தொடர 93% வாரிசுகள் விரும்பவில்லை

குடும்ப வணிகத்தை தொடர 93% வாரிசுகள் விரும்பவில்லை

குடும்ப வணிகத்தை தொடர 93% வாரிசுகள் விரும்பவில்லை

குடும்ப வணிகத்தை தொடர 93% வாரிசுகள் விரும்பவில்லை

ADDED : ஜூன் 10, 2025 07:06 AM


Google News
Latest Tamil News
இந்தியாவில் வெறும் 7 சதவீத வாரிசுகள் மட்டுமே குடும்பத் தொழிலை தொடர விரும்புவதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி., குளோபல் பிரைவேட் பேங்கிங் நிறுவனம், இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த, குறைந்தபட்சம் 17 கோடி ரூபாய் முதலீடு செய்யக்கூடிய சொத்துக்களை கொண்ட வணிக உரிமையாளர்களிடம், வாரிசுரிமைக்கான தயார்நிலை குறித்து ஆய்வு நடத்தியுள்ளது.

* தொழிலை வாரிசுகளிடம் ஒப்படைக்க விரும்பும் வணிக உரிமையாளர்கள்

நாடு பங்கு (%)இந்தியா 79பிரிட்டன் 77ஸ்விட்சர்லாந்து 76தைவான் 61சீனா 56ஹாங்காங் 44



* முந்தைய தலைமுறையிடம் உதவி கேட்க தயக்கம் காட்டும் தொழில்முனைவோர்

நாடு பங்கு (%)ஹாங்காங் 50சிங்கப்பூர் 46இந்தியா 41தைவான் 40சீனா 34



* இந்திய மனநிலை

அடுத்த தலைமுறையின் நிர்வாகத் திறன் மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் 88%வாரிசுகள் வணிகத்தை வழிநடத்த மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளவர்கள் 45 %நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய குடும்ப தொழில் நிறுவனங்களின் பங்கு 79%



என்ன காரணம்?

 தனித்துவம் மற்றும் மாறும் விருப்பங்களால் இன்றைய தலைமுறையினர் தங்கள் எதிர்காலம் குறித்த தேர்வில், குடும்ப விருப்பங்களில் இருந்து மாறுபடுகின்றனர். நகர்ப்புற வளர்ப்பில் உலகத்தர கல்வி, தனிப்பட்ட எதிர்கால இலக்குகள் காரணமாக ஸ்டார்ட்அப், தனி நிறுவனம் எனத் துவங்கி, குடும்ப வணிகத்தின் நிழலில் இருந்து விலகி தனித்தன்மையை நிரூபிக்க விரும்புகின்றனர். கடந்த 1990களில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பின் நிறுவப்பட்ட பல வணிக நிறுவனங்கள், வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றும் பன்முக கலாசார சூழலில் வளர்ந்த இரண்டாம் தலைமுறை தொழில்முனைவோரை கொண்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us