டாடா பஞ்ச் இ.வி.,க்கு 'பாதுகாப்பான கார்' பட்டம்
டாடா பஞ்ச் இ.வி.,க்கு 'பாதுகாப்பான கார்' பட்டம்
டாடா பஞ்ச் இ.வி.,க்கு 'பாதுகாப்பான கார்' பட்டம்
ADDED : ஜூன் 14, 2024 01:56 AM

மும்பை: இந்தியாவின் பாதுகாப்பான காராக உருவெடுத்துள்ளது, டாடாவின் பஞ்ச் இ.வி., மின்சார கார்.
'பாரத் என்கேப்' கிராஷ் டெஸ்டில், பஞ்ச் இ.வி., மற்றும் நெக்ஸான் இ.வி., கார்கள் சோதனை செய்யப்பட்ட நிலையில், இரு கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளன.
பஞ்ச் இ.வி., கார், பாரத் என்கேப்-பில், 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் மின்சார காராகும். அதுவும், பஞ்ச் இ.வி., டாடா கார், அணிவகுப்பில் உள்ள அனைத்து கார்களையும் பின்னுக்கு தள்ளி, அதிக பாதுகாப்பு புள்ளிகளை பெற்றுள்ளது.
பெரியவர்கள் பாதுகாப்பில், பஞ்ச் இ.வி., 32க்கு 31.46 புள்ளிகளையும்; நெக்ஸான் இ.வி., 32க்கு 29.86 புள்ளிகளையும் பெற்று உள்ளன. குழந்தைகள் பாதுகாப்பில், பஞ்ச் இ.வி., கார் 49க்கு 45 புள்ளிகளையும், நெக்ஸான் இ.வி., 49க்கு 44.95 புள்ளிகளையும் பெற்றுள்ளன.