இன்போசிசில் ஜி.எஸ்.டி., பிரச்னை: நிர்மலா தலையிட கோரிக்கை
இன்போசிசில் ஜி.எஸ்.டி., பிரச்னை: நிர்மலா தலையிட கோரிக்கை
இன்போசிசில் ஜி.எஸ்.டி., பிரச்னை: நிர்மலா தலையிட கோரிக்கை

எதனால் இந்த பிரச்னை?
இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள், வெளிநாடுகளில் கிளைகள் வைத்துள்ளன. ஜி.எஸ்.டி.,க்காக, அவை தனித்தனி நிறுவனங்களாக காட்டப்படுகின்றன. இதன் வாயிலாக, வெளிநாட்டில் உள்ள நிறுவனத்துக்கான செலவினங்களுக்கு, இந்தியாவில் வரி செலுத்தத் தேவையில்லை.
ஜி.எஸ்.டி., தரப்பு வாதம்
'ரிவர்ஸ் சார்ஜ்' நடைமுறைகளின்படி, ஒரு குறிப்பிட்ட பொருளை வினியோகித்தவர் அல்லது சேவை அளித்தவர், வரி செலுத்தாத நிலையில், அந்த பொருளை அல்லது சேவையைப் பெற்றவர், வரி செலுத்த வேண்டும்.
இன்போசிஸ் தரப்பு வாத ம்
கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டு கிளைகள், இந்தியாவில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செய்யும் சேவைகள், ஜி.எஸ்.டி., வரம்புக்குள் வராது என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.
நோட்டீஸ் வாபஸ்
பிரச்னை பெரிதாகி வரும் நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக அனுப்பிய நோட்டீஸை திருமப்பெற்றுக் கொள்வதாக கர்நாடக மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்துள்ளதாக, இன்போசிஸ் நிறுவனம் நேற்று பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது.